Tuesday, February 23, 2010

அசல் ஹீரோ நிஜ வாழ்க்கையிலும்....

எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும், அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும் மிரட்டுறாங்க." கடந்த 6ஆ‌ம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வ‌ரின் முன்னால் அ‌ஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அ‌ஜீத்தின் பேச்சைக் கேட்ட ர‌‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்து கை தட்டிய இன்னொருவர் இயக்குனர் சேரன்.
அ‌ஜீத்தின் பேச்சு திரையுலகிலும் அதற்கு அப்பால் ஊடகங்கள், பொதுமக்கள் மத்தியிலும் வாதப் பொருளாகியிருக்கிறது. அ‌ஜீத்தின் பேச்சையொட்டி திரையுலகினரும், பொது மக்களும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த கருத்துகள் என்ன என்று பார்ப்பதற்குமுன் திரையுலகினரை பல்வேறு பிரச்சனைகளுக்காக ஒன்று திரட்டும், அவர்களை கட்டுப்படுத்தும் திரையுலக சங்கங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிவது அவசியம். உலகில் எல்லாத் துறைகளிலும் சங்கங்கள் உண்டு. தமிழகத்தில் ஐடி மற்றும் காவல்துறை நீங்கலாக அனைத்துத் துறைகளிலும் சங்கங்கள் செயல்படுகின்றன. கட்சி சார்ந்த, கட்சி சாராத பல சங்கங்கள் ஒரு துறையில் இருக்கும். இதில் நமது கருத்தோட்டத்துடன் ஒத்துவரும் எந்த சங்கத்திலும் நாம் உறுப்பினராகலாம். எந்தச் சங்கமும் தேவையில்லை என்று சங்க அடையாளம் இன்றியும் ஒருவர் பணிபு‌ரியலாம். யாரும் உங்கள் வேலையை பறிக்க மாட்டார்கள். தனி மனித சுதந்திரம் வெளிப்படையாக சங்கங்களால் சுரண்டப்படுவதில்லை. மேலும், வேலையில் சேர்வதற்குமுன் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எந்த சங்கத்தில் சேர்வது அல்லது சேராமல் இருப்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் ஒருவ‌ரின் தனி மனித உ‌ரிமை சார்ந்தது.திரைத்துறையில் இப்படி கட்சி சார்ந்த கட்சி சாராத என்று பல சங்கங்கள் கிடையாது. நடிகர்களுக்கு என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று ஒரே சங்கம். இப்படி ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குனர்கள் என்று அனைத்துப் பி‌ரிவினருக்கும் ஒரே சங்கம்தான். இந்த சங்கங்களில் உறுப்பினராக இல்லாத ஒருவர் நடிக்கவோ, கலை இயக்குனராக பணிபு‌ரியவோ, லைட் தூக்கவோ ஏன் வாகனம் ஓட்டும் ஒரு சிறிய வேலையைகூட செய்ய முடியாது. அதாவது இந்த சங்கங்களின் கருத்துகள், செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. திரைத்துறையில் நுழைய வேண்டும் என்றால் இந்த சங்கங்களில் நீங்கள் உறுப்பினராகித்தான் ஆக வேண்டும். திரைத்துறையில் நுழையும் போதே பிடித்ததை தேர்வு செய்யும் ஒருவ‌ரின் தனி மனித உ‌ரிமை காவு வாங்கப்பட்டுவிடுகிறது. கலைக்கு எல்லை கிடையாது, காற்றைப் போல அது சுதந்திரமானது என்றெல்லாம் கூறப்படும் திரைத்துறை இதுபோன்ற கட்டுப்பாடான சங்கங்களால்தான் பேணப்பட்டு வருகிறது.நடிப்பதற்கு விருப்பம், திறமை, வாய்ப்பு மூன்றும் இருந்தாலும் திரைப்படத்தில் நீங்கள் நடிக்க வேண்டுமென்றால் முதலில் நடிகர் சங்கத்தில் உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதற்கு சங்கத்துக்கு நுழைவுக் கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். அனைத்து சங்கங்களும் இப்படி பல ஆயிரங்களை நுழைவுக்கட்டணமாக வசூலிக்கின்றன. உதவி இயக்குனர்களுக்குதான் குறைந்த கட்டணம், 5,000 ரூபாய். இந்தப் பணத்தை செலுத்த முடியாத கலையார்வலர்களின் கதி என்ன என்பதை இதுவரை யாரும் விளக்கியதில்லை.சில சங்கங்களில் பணம் இருந்தாலும் உறுப்பினராக சுலபத்தில் சேர்ந்துவிட முடியாது. உதாரணமாக, நடனக் கலைஞர்களுக்கான சங்கத்தில் ஏற்கனவே அதிகம் பேர் இருப்பதால் புதிய உறுப்பினர்களை அவர்கள் சமீபமாக சேர்ப்பதில்லை. யாரேனும் ஓய்வு பெறும்போது காத்திருந்து பல லட்ச ரூபாய் கொடுத்து அந்த உறுப்பினர் கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குள் நடனம் மறந்துப் போகாமல் பேண வேண்டியது உங்களின் கடமை.இப்படியான கறாரான சங்க அமைப்பிலிருந்துதான் திரைத்துறையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. மூன்று விதமான பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த‌க் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.முதலாவதாக நடிகர் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களின் நலனுக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தும்போது பிறப்பிக்கப்படுவது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை தொடங்குகிறார்கள். அப்படியும் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பஞ்சாயத்துகள் நடத்தப்படும். பல நடிகர்கள், நடிகைகள் இந்த நெருக்கடியை சந்தித்திருக்கிறார்கள்.‘நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதனால் சங்க கடனை அடைக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது, அதேநேரம் கடனை அடைக்க என்னாலான பண உதவி செய்கிறேன்’ என்று அ‌ஜீத் கூறிய போது அதனை ஏற்க அப்போதைய நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் மறுத்ததோடு அ‌ஜீத்தை அவன் இவன் என்று ஏக வசனத்தில் திட்டிய சம்பவமும் நடந்திருக்கிறது.

இரண்டாவதாக ஆளும் கட்சியால் பெறப்பட்ட, பெறப் போகும் சலுகைகளுக்காக முதலமைச்சரை குளிர்விக்க நடத்தப்படும் பாராட்டு கூட்டங்கள். திரையுலக சங்கங்கள் கட்சி சார்பற்றவை என்றாலும் சலுகைகளை முன்னிறுத்தி ஆளும் கட்சிக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்பவை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட பாராட்டு கூட்டத்தில் தாயே உன்னால்தான் தமிழ் திரையுலகம் பிழைத்திருக்கிறது என்று நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்கள். அம்மாவைப் பார்த்து ‘சன்’ தான் பயப்படணும், ‘சன்’னைப் பார்த்து அம்மா பயப்பட‌த் தேவையில்லை என்று நாடகம் போட்டார் எஸ்.வி.சேகர்.கருணாநிதி முதலமைச்சரான போது காட்சி மாறியது. திரையுலகை காத்த சூ‌ரியனே என்றார்கள். சூ‌ரியன் இல்லையேல் இலை இல்லை என்பதாக நாடகம் உருமாறியது. இந்த அரசியல் கபடி அரங்கேற்றத்துக்கு திரைத்துறையினர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சங்கங்கள் ஆணை பிறப்பிக்கும். அதாவது ஒருவரை திட்டுவதற்கும், வாழ்த்துவதற்கும் ஒரே மனநிலையுடன் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். உங்களின் தனிப்பட்ட கருத்து ஒரு பொருட்டல்ல. மீறினால் தடை, ரெட் கார்ட்.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த த்‌ரிஷா, ப்‌ரியாமணி, ஸ்ரேயா ஆகியோ‌ரின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் விடுத்த அறிக்கை அனைத்துப் பத்தி‌ரிகைகளிலும் வெளிவந்தது. நடனமாட முடியாது என்பது ஒரு நடிகையின் நடிக‌ரின் தனி மனித உ‌ரிமை சார்ந்த முடிவு. அதற்கு தண்டனை விதிக்க சங்கங்களுக்கு உ‌ரிமை தந்தது யார் என்ற அசட்டு கேள்விகளை யாரும் கேட்க கூடாது.மேலும், இதுபோன்ற துதிபாடும் நிகழ்ச்சியில் நடனமாடாத, கலந்து கொள்ளாத அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீங்கள் நினைக்கலாகாது. ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நெப்போலியன், தியாகு, சந்திரசேகர் உள்ளிட்ட திமுக அனுதாபிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. கருணாநிதிக்கு நடந்த பாராட்டு கூட்டத்தில் அதிமுக அனுதாபிகள் பங்கேற்கவில்லை. அ‌ஜீத்தை ஏக வசனத்தில் திட்டிய முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தயா‌ரிப்பாளர் சங்க உறுப்பினருமான விஜயகாந்தும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மீது பெப்சி தலைவர் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கவில்லை. த்‌ரிஷா, ஸ்ரேயா, அ‌ஜீத் போன்ற கட்சி சார்பற்றவர்களுக்கு மட்டுமே தண்டனை. கட்சி சார்புள்ளவர்களுக்கும், கட்சி நடத்துகிறவர்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் ரகசிய பொது மன்னிப்பும் வழங்கப்படும்.மூன்றாவதாக, ஒட்டுமொத்த தமிழினம் சார்ந்த ஓகேனக்கல், காவி‌ரி, ஈழம் போன்ற பிரச்சனைகளுக்காக திரையுலகினரை ஒன்று திரட்டுவது. பெரும்பாலும் அப்போதைய ஆளும் கட்சியின் தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் பே‌ரிலேயே இந்த ஒன்றுகூடும் வைபவம் நடத்தப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் காவி‌ரிப் பிரச்சனைக்காக திரையுலகினர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்தினர். இதற்குப் பின்னால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியும், வழிநடத்தலும் இருந்தது என்பது உலகறிந்த ரகசியம். அதே பாரதிராஜா ஒகேனக்கல் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சில‌ரின் தூண்டுதலின் பே‌ரில் அது நடத்தப்படுவதாக குற்றம்சாற்றினார். மேலும், இதுபோன்ற கூட்டங்களால் எந்தப் பிரச்சனையிலும் கடுகளவு முன்னேற்றம் ஏற்பட்டதா என்றால் இல்லை. மாறாக பிரச்சனையை திசை திருப்புவதாகவே இவை அமைந்திருக்கின்றன. நெய்வேலி போராட்டத்தில் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை அழைக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறி மூன்று மாவட்ட ரசிகர்களுக்கு ரகசிய அழைப்புவிடுத்தார் விஜயகாந்த். வண்டிகளில் வந்து குவிந்த அவர்கள் விஜயகாந்தை வாழ்த்திப் போட்ட கோஷத்தால அந்த போராட்டத்தின் நோக்கமே மாறிப்போனது. மேலும், எலிக்கறி தின்னும் விவசாயிகளுக்காக ஒன்று திரண்ட திரையலகினருக்கு ஒன்பது வகையான அசைவ உணவுகள் ப‌ரிமாறப்பட்டன. அவை எந்தெந்த உணவுகள் என்ற பட்டியலை சில ஊடகங்கள் உற்சாகமாக வெளியிட்டன. சகலகலா வல்லவனுடன் ஒரே கா‌ரில் வந்த இஞ்சி இடுப்பழகி யார் என்று காஸிப் எழுதி மகிழ்ந்தன வேறு சில ஊடகங்கள்.திரையுலகினர் நடத்தும் இத்தகைய போராட்டங்களை காணக் குவியும் ரசிகர்கள் தங்கள் விருப்பமான நடிகர்கள் வரும்போது எழுப்பும் கரகோஷம் சாவு வீட்டில் எழுப்பும் உற்சாக கூச்சல்களுக்கு ஒப்பானவை. தமிழன் பிரச்சனைக்கு தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் நடிகன் போராட வேண்டும் என்று கோ‌ரிக்கை வைப்பவர்கள் இந்த கூத்தை மனதில் இருத்திக் கொள்வது அவசியம். (அதேநேரம் திரையுலகின‌ரில் ஒரு பி‌ரிவினர் தன்னிச்சையாக முன் வந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஈழப் பிரச்சனை. இதில் இயக்குனர்கள் காட்டிய எழுச்சி ச‌ரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள யாரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை, மிரட்டப்படவில்லை. இன எழுச்சி ஆற்றொழுக்காக தானாக எழுந்தது, தமிழகமெங்கும் பரவியது. தமிழினத்துக்கு துரோகம் இழைத்த பெரும் தலைகள் இந்த எழுச்சியால் தேர்தலில் மண்ணை‌க் கவ்வினர்). காவி‌ரி, ஒகேனக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு போராடும்போது வேறொரு வன்முறையும் தொடர்ந்து அரங்கேறுகிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட முரளி, ர‌‌ஜினி, அர்ஜுன், பிரகாஷ்ரா‌ஜ் போன்ற நடிகர்களிடம் கன்னடர்களுக்கு எதிரான கருத்துகளை சொல்ல வலுக்கட்டாயமாக மைக் அவர்கள் முன் திணிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் அவர்கள் சொல்லும் கருத்து எவ்விதமான எதிர்வினைகளை உருவாக்கும் என்பது நாம் அறியாததல்ல.மலையாள நடிகர் தமிழச்சியை எருமை என்று சொன்னதற்கு நாம் கொந்தளித்தோம், வழக்கு தொடர்ந்தோம், வீட்டை அடித்து நொறுக்கினோம், தீ வைத்தோம். அவர் கையெடுத்து மன்னிப்பு கேட்ட பிறகும், யாரை எருமை என்றாரோ அவரது பாதத்தை கண்ணீரால் கழுவ வேண்டும் என்று ஊடகம் மூலமாக கோ‌ரிக்கை வைக்கிறோம். இன உணர்வில் தமிழனுக்கு இரண்டு கொம்பென்றால் கன்னடக்காரனுக்கு ஒன்பது கொம்புகள். அவனை விமர்சித்துவிட்டு ர‌‌ஜினியோ, முரளியோ கர்நாடக எல்லையில் கால் வைக்க முடியுமா?
ஆனால் இந்த நடிகர்களின் வீடுகள் கர்நாடகாவில் இருக்கின்றன. உறவினர்கள், நண்பர்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். அவர்கள் கர்நாடகா செல்ல வேண்டியது வாழ்வின் அவசியமாகிறது. இதனை தெ‌ரிந்து கொண்டே அவர்களின் முன் மைக்கை திணிக்கும் நமது புரட்சி‌த் தமிழர்களுக்கு கர்நாடகா செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் படங்கள் கர்நாடகாவில் ஓடுவதுமில்லை. பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு வீர வசனம் பேசுகிறார்கள். மற்றவர்களையும் பேசும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.அதேநேரம் இந்த புரட்சி‌த் தமிழர்கள் பாபா படப்பெட்டியை பாமக-வினர் தூக்கிச் சென்ற போதும், முதல்வன் பட சிடிகள் மதுரையில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட போதும் வாயே திறக்கவில்லை. காரணம் அவர்கள் வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. படங்கள் தமிழ்நாட்டில் ஓட வேண்டும். வாய் திறந்து பேசினால் வீடு தாக்கப்படலாம், படப் பெட்டி கடத்தப்படலாம். கருத்து சொன்னால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தெ‌ரிந்து கொண்டே கன்னடர்களுக்கு எதிராகப் பேச இவர்கள் மற்றவர்களை வற்புறுத்துகிறார்கள். இது ஒருவித மிரட்டலே அன்றி வேறில்லை.இதுபோன்ற இறுக்கமான தனி மனித சுதந்திரத்துக்கு வழியில்லாத சூழலில்தான் மௌனத்தை கலைத்து உ‌ரிமைக்கான குரலை தகுதியானர்வர்களின் முன்பு ஒலித்திருக்கிறார் அ‌ஜீத். இந்தப் பின்புலத்தில்தான் அவரது பேச்சை பு‌ரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து அ‌ஜீத்தை தமிழின விரோதியாக பிரச்சனையை மடைதிருப்புவது ஆபத்தானது. திரையுலகில் அ‌ஜீத்தால் முன் வைக்கப்பட்டிருக்கும் தனி மனித உ‌ரிமைக்கான குரலை அது சிதைத்துவிடவும் வாய்ப்புள்ளது.
தமிழர்களுக்கும் அவர்கள் நலன்களுக்கும் அ‌ஜீத் எதிரானவர் என்ற இன விரோதி பிம்பத்தை வரைவதில் சில ஊடகங்களும், அவரது தொழில் விரோதிகளும் ஏற்கனவே தங்களது பங்களிப்பை‌க் காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு இனத்தூய்மை என்ற தூ‌ரிகையை அவர்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களும் கூட இந்த போலி பிம்பத்துக்கு மயங்கிவிடுகிறார்கள். அ‌ஜீத்தின் பேச்சை அங்கேயே ஆத‌ரித்த சேரன், ர‌‌ஜினி இருவரையும் இவர்கள் தாக்கவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இன உணர்வை வெளிப்படையாக காட்டும் சேரனை இனத்தின் பெயரைச் சொல்லி விமர்சிக்க முடியாது. ர‌‌ஜினியை விமர்சிப்பதன் மூலம் அவரது திரளான ரசிகர்களை பகைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு விருப்பமில்லை. மாட்டிக் கொண்டவர் அ‌ஜீத் மட்டும்.‘தமிழ்நாட்டில் நடித்து தமிழர்களின் பணத்தில் வீடு, கார் என்று கொழுத்திருக்கும் நடிகன் தமிழர்களின் பிரச்சனையான ஓகேனக்கல், காவி‌ரி பிரச்சனையில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது எவ்வளவு திமிர்த்தனம்?’ என்று திரையுலகினர் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் அ‌ஜீத் மீது பாய்ந்துள்ளனர். இந்த உளுத்துப் போன கேள்வியின் பின்னால் உள்ளது நமது அடிமை மனோபாவமே அன்றி வேறில்லை.நடிகர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், ஆசி‌ரியர்கள், தொழிலதிபர்கள், வங்கிப் பணியாளர்கள், ‌ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், எல்ஐசி ஊழியர்கள், சாஃப்ட்வேர் இன்‌ஜீனியர்கள், கல்வி நிறுவனம் வைத்திருப்பவர்கள், டாஸ்மாக் பார் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினரும் தமிழ்நாட்டில் தொழில் செய்து தமிழர்களின் பணத்தில் சம்பாதிப்பவர்கள்தான். ஒகேனக்கல் என்பதும் காவி‌ரி என்பதும் நடிகர்களுக்கேயு‌ரிய பிரச்சனை மட்டுமல்ல. இவர்களையும் சார்ந்ததே. முக்கியமாக நடிகர்கள் எப்படி கலந்து கொள்ள மாட்டேன் என்று திமிர்த்தனமாக பதிலளிக்கலாம் என்று கேள்வி கேட்பவர்களையும் உள்ளடக்கியதே. மேலே உள்ளவர்களை தவிர்த்து நடிகர்களை மட்டும் கேள்வி கேட்பது நமது அடிமை மனோபாவத்தையே காட்டுகிறது. டாக்டர் செ‌ரியன் நூறு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவுடன் அவர் நாடாளும் தகுதி பெற்றுவிட்டதாக நாம் கருதுவதில்லை. ஒருவர் பத்து வழக்குகளில் சிறப்பாக வாதாடி ஜெயித்தால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றுவிட்டதாக நாம் போஸ்டர் அடிப்பதில்லை. ஒரு ஆசி‌ரியர் பல நூறு திறமையான மாணவர்களை உருவாக்கினால் அதுவே அவர் 2011ல் முதலமைச்சராவதற்கான தகுதி என்று நாம் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், ஒருவன் நாலு படம் நடித்தாலே அவனுக்கு நாடாளும் பொறுப்பு முதல் தமிழ‌ரின் பூர்வகுடி பிரச்சனை வரை அனைத்தையும் ஏற்று நடத்துகிற தலைமைப் பொறுப்பை வந்துவிட்டதாக கருதுகிறோம். வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடிக்கின்றோம். தலைவா தலைமை ஏற்க வா என்று கதறி ஒப்பா‌ரி வைக்கிறோம்.அதேபோல் செ‌ரியன் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்பதற்காக அவ‌ரிடம் கொலை வழக்கை யாரும் ஒப்படைப்பதில்லை. ராம்ஜெத் மலானி சிறப்பாக வாதிடுவார் என்பதற்காக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு யாரும் அவரை ப‌ரிந்துரைப்பதில்லை. காரணம் செ‌ரியனின் துறையல்ல வாதிடுவது. மலானியின் வேலையல்ல அறுவை சிகிச்சை செய்வது. அவர்கள் தத்தமது துறைகளில் மட்டுமே வல்லவர்கள். ஆனால் ஒருவன் மேக்கப் போட்டவுடனேயே தமிழர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய, அவர்களை வழிநடத்தக் கூடிய சர்வரோக நிவாரணியாக மாறிவிடுவதாக கற்பனையான ஒரு வாலை நம் புட்டத்தில் செருகி வசதிக்கேற்ப ஆட்டிக் கொள்கிறோம்.இந்த கீழ்த்தரமான அடிமை மனோபாவத்தின் இன்னொரு வடிவம்தான் எந்தப் பிரச்சனையிலும் நடிகர்கள் கருத்து சொல்ல வேண்டும், முன்னின்று போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. நடிகர்களின் வேலை நடிப்பதுதான், அவர்களை அரசியல்வாதிகளின் வேலையை செய்யச் சொல்லாதீர்கள் என்கிறார் அ‌ஜீத். இதன் பொருள் நடிகனுக்கு சமூகப் பொறுப்பு இல்லை என்பதல்ல. நடிகர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் அவர்களை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள் என்பதே. யாரும் வாய் திறந்து பேச முடியாத இறுக்கமான சூழலில் தனது கருத்தை, உ‌ரிமைக்கான குரலை அழுத்தமாக ஒலித்திருக்கிறார் அ‌ஜீத். அதன் அவசியம் பு‌ரிந்து கைத்தட்டி வரவேற்றிருக்கிறார் ர‌‌ஜினி. தனிமனித உ‌ரிமையின்பால் தாகம் உள்ள அனைவரும் அ‌ஜீத்தின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.ஹேட்ஸ் ஆஃப் அ‌ஜீத்.

நன்றி: வெப்துனியா

Thursday, January 7, 2010

சுறாவும் விசயும்

நானும் எவ்வளவோ யோசனை பண்ணி பார்த்தும் நண்பர் இளைய தளபதியை கலாய்க்க இன்னைக்கு முடியல அதனால சுறா பட்த்தில இருந்து சில காட்சிகள்.....












நானும் எவ்வளவோ யோசனை பண்ணி பார்த்தும் நண்பர் இளைய தளபதியை கலாய்க்க இன்னைக்கு முடியல அதனால சுறா பட்த்தில இருந்து சில காட்சிகள்...

Tuesday, December 29, 2009

சுறாவால் திருந்திய விசய்


தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் அனைவருமே பெரிய இடத்துக்கு வந்தது அவர்களின் அசல் முகத்தை மாற்றி நடித்ததால்தான் என்றால் அது மிகையாகாது.. அதற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு:




















இப்போது சுற்றா!!!!!!!!!!! ஃப்ளாப் ஆன நிலையில் தனது அடுத்த படமான காவல்காரனில் தனது முகத்தை மாற்றி கொண்டுள்ளார் நம்ம உலக தளபதி விஜய் அண்ணா அவர்கள்
அது என்னப்பா புது கெட்டப்பு.... மேலே பாருங்கள்...

Thursday, December 24, 2009

விசய் - எம் ஜி ஆர் 10 வித்தியாசம்


இளைய தளபதி விஜய் தற்சமயம் எல்லாப் படங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பாலோ பண்ணுகிறார். சமீபத்தில் இமாலய வெற்றியடைந்த வில்லு படத்திலும் அதே பார்முலா தான். தற்போது வெளியாகியிருக்கும் பிரம்மாண்ட வெற்றிப் படமான வேட்டைக்காரன் படத்தின் தலைப்பிலிருந்தே தலைவரின் பாலோ அப்தான். சினிமாவில் கொடுக்கிற‌ இம்சை போதாதென்று இப்போது ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. எப்படியும் முதல்வராகிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும் ஆசையுடனுமே கட்சி துவங்க இருக்கிறார். அது மட்டுமின்றி அந்தக் கட்சியின் பெயரிலும் கொடியிலும் எம்ஜியார் இடம்பெறுவார் என அவரது அல்லக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால அவங்க 2 பேருக்கும் இருக்குற வித்தியாசங்கள எடுத்துக்காட்டும் முயற்சி தான் இந்தப் பதிவு.


வித்தியாசம் 1:


எம்ஜிஆர்: இலங்கை கண்டியிலே பிறந்தார். சினிமாவில் நடிக்கவேண்டி தமிழகம் வந்து சாதித்தார். தமிழகத்திலே திருமணம் செய்தார்.


விஜய் : தமிழகத்திலே பிறந்தார். இலங்கையிலே பெண் எடுத்தார். தமிழக மக்களின் பொருமையைச் சோதிக்க வேண்டி சினிமா பீல்ட்டினைத் தேர்ந்தெடுத்தார்.


வித்தியாசம் 2:


எம்ஜிஆர்: சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் சின்ன சின்ன அதாவது பிட்டு பிட்டான வேடங்களில் நடித்து சினிமாவுக்குள் கதாநாயகனாகப் புகுந்தார்.


விஜய் : ஆரம்பம் முதலே பிட்டு படங்களில் தான் அறிமுகமானார். கேரளத்திலே ஷகிலா படம் எந்த அளவிற்கு போனதோ அந்த அளவிற்கு அதிரிபுதிரியாய் தமிழ்நாட்டில் ஓடியது இவரது படங்கள். அதன் முழு வேலையையும் அவரது தந்தைதான் கவனித்துக்கொண்டார் என்பது தான் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.


வித்தியாசம் 3:


எம்ஜிஆர்: படங்களில் விதவிதமான வேடங்கள் போட்டு நடித்தார். நிறைய படங்களில் மாறுவேசம் போட்டுக்கொண்டு முகத்தில் மரு வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வந்து உளவு பார்ப்பார். அந்த திரிலிங்கை ரசிக்காதவர்களே இருக்க முடியாது .


விஜய் : மாறுவேசம் தேவையில்லை. சொந்த வேசத்தில் நடித்தாலே மக்களுக்கு சிரிப்பு தான் வரும். சரி செஞ்சி தான் பாப்பமே அப்டின்னு “போக்கிரி” படத்துல போட்ட ஒரு போலீஸ் வேசத்த பாத்துட்டு, சிரிச்சி சிரிச்சி சிரிப்ப‌ நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு போன ரசிக கண்மனிகள் இன்னும் திரும்பவேயில்லை.


வித்தியாசம் 4:


எம்ஜிஆர்: இவர் படங்களில் அதிகபட்சம் ஒரு வில்லன் தான் இருப்பார். வில்லனிடமிருந்து கதாநாயகியை மீட்க குதிரையிலே துரத்திக்கொண்டு ஓடுவார். அது மட்டுமின்றி அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையில் ஓடிப்போய் தாவி ஏறிவிடுவார்.


விஜய் : இவர் படம் முழுவதும் வில்லன்கள் தான் உலா வருவார்கள். ஆனால் எல்லோரையும் மிக புத்திசாலித்தனமாக அதாவது எதிரியை முட்டாளாக்கிவிட்டு (நம்மையும் தான்) சமாளித்து தப்பிவிடுவார். கதா நாயகியை மீட்க மோட்டார் படகு,ஹெலிகாப்டரில் துரத்திச்சென்று மீட்டுவருவார். மேலிருந்து தாவி வந்து ஓடும் ரயிலில் சர்வசாதாரணமாக ஏறுவார். உஷ்..,இப்பவே கண்ணக் கட்டுதே!


வித்தியாசம் 5:


எம்ஜிஆர்: தன் அண்ணன் சக்ரபாணியை எப்படியாவது முன்னனி நடிகராக்க வேண்டும் என தன் படங்களில் அவருக்காக சிபாரிசு செய்தார்.அதன் மூலம் அவரும் நிறைய படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராக உருவெடுத்தார். அண்ணன் மீது அவ்வளவு பாசம் கொண்டவர் புரட்சித்தலைவர்.


விஜய் : தன் தம்பி நடிக்க வருகிறார் என தெரிந்ததும் எங்கே தனக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என பயந்தவர். அவரை கவுக்க என்னவெல்லாம் பிரயோகிக்க முடியோமோ அதையெல்லாம் பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றிய வள்ளல். அந்த அளவிற்கு அவர் மீது பாசம் கொண்ட வரட்சித் தளபதி.


வித்தியாசம் 6:


எம்ஜிஆர்: இவர் படங்களில் இவருக்கு நண்பர்களாக யாராவது ஒருவர் தான் (சந்திரபாபு, நாகேஷ், தங்கவேல்) வருவார்கள். தலைவர் போடும் சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவர்களும் சேர்ந்து சண்டை போடுவார்கள்.


விஜய் : இவர் படங்களில் குறைந்தது 4 முதல் 6 நண்பர்கள் கூடவே வருவார்கள். ஆனால் சண்டைக் காட்சிகளில் காணாமல் போய் விடுவார்கள். காதலுக்கு உதவிசெய்யும் கருவேப்பிலை வேலை மட்டும் தான் அவர்களுக்கு.


வித்தியாசம் 7:


எம்ஜிஆர்: தன் ரசிகர்கள் கூட்டத்தில் அல்லது அரசியல் பொதுக்கூட்டங்களில் தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களைப் பார்த்து "என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" என பேச்சைத் துவக்குவார்.


விஜய் : தன் ரசிகர்களை என்றைக்குமே மதிக்காத, கண்டுகொள்ளாத இவர் ரசிக கண்மனிகளைப் பார்த்து "டேய்...., பேசிக்கிட்டிருக்கோம்ல....,சைலன்ஸ்" அப்டின்னு கத்துவார்.


வித்தியாசம் 8:


எம்ஜிஆர்: இவர் படங்களில் எதிரிகளிடம் மாட்டி கொண்டு சிறையிலே அடைக்கப்படுவார்.எதிரிகளின் அகழிகளில் அடைக்கப்பட்டுள்ள‌ சிங்கம்,புலி ஆகியவற்றோடு சண்டையிட்டு அவைகளை அடக்கிவிட்டு தப்பிச்சென்று விடுவார்.


விஜய் : விலங்குகளோடு சண்டையிடுவது மிக சாதாரண விசயம் எனக் கருதியதால் இவர் மிசின்களோடு சண்டையிடுவார். நம்ம அலுவலகங்களில் சாதாரணமாகவே லிப்ட் எங்கயாவது மாட்டிக்கிட்டா கம்பிகளை வெல்டிங் வச்சித்தான் உடைத்து எடுப்பார்கள். ஆனால் தளபதியை லிப்ட்டுக்குள் வைத்து அடைத்து தண்ணீருக்குள் முக்கிவிட்டுச் செல்வார்கள். அந்த சமயத்தில் கூட அதை மிகச் சாதாரணமாக உடைத்துக்கொண்டு வெளியே வந்து பாய்ந்து செல்வார். இன்னும் கொஞ்ச நாளில் ஓடும் டிரைனை ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல அதோடு சண்டையிட்டு நிறுத்துவது மாதிரி சீன் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எப்டித்தான் புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாய்ங்களோ!


வித்தியாசம் 9:


எம்ஜிஆர்: கத்திச் சண்டை, சிலம்பச் சண்டையில் மாவீரன். இவர் படங்களில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். பாடல் காட்சிகளை இரண்டு கைகளை ஆட்டியே ஓட்டிவிடுவார்.


விஜய் : இவர் படங்களில் வாய்ச்சண்டை அதிகமாக இருக்கும். கார்களில் குண்டு வைத்து கும்பலாக வெடிக்கும் போது இவர் மட்டும் அங்கிருந்து கூலாக நடந்து வருவார். கப்பலில் இருந்து கயிறு இல்லாமல் குதிப்பார், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே சண்டையிடுவார். இன்னும் கொஞ்சம் நாட்களில் தன்னை தாக்கவரும் ஹெலிகாப்டரின் வாலைப்பிடித்து மலையில் அடிப்பது போன்ற காட்சிகள் வரலாம். பாடல் காட்சிகளில் இரண்டு கையை ஒரு மாதிரி மேலும் கீழும் ஆட்டிக்காட்டுவார். இப்போது ஒரு கையை உதறிக்காட்டுகிறார்.


வித்தியாசம் 10:


எம்ஜிஆர்: இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு எவ்வளவோ மருத்துவ உதவிகள், திருமண உதவிகள் போன்றவற்றை செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்யும் உதவிகள் எதுவுமே வெளியே வராது.


விஜய் : இவர் 10 ஜோடிகளுக்கு மிக ரகசியமாக இலவசத் திருமணம் செய்து வைப்பார். ஏழைகளுக்கு இலவச தையல் மிசின், இஸ்திரி பொட்டி வழங்கும் நிகழ்சிகளும் மிக ரகசியமாகத் தான் நடக்கும். காரணம் இவருக்கு விளம்பரமே பிடிக்காது என அவர் தந்தை சொல்லுவார். ஆனால் அடுத்த நாள் இந்த செய்தி, படங்கள் மற்றும் “நான் செய்யும் உதவியை வெளியே சொல்லிக்கொள்வதே இல்லை” என்ற இவரது பேட்டியும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துவிடும்.

நன்றி கழுதை அண்ணா

வேட்டைக்காரன் - விமர்சனம்


சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.
அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.

அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான்.

முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல....என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.
நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?
பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.
’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு.
ஆனால் வெகு நீ..................ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.
அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.
விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.
கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.
பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.
பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.
பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.
போலீஸ் அதிகார் ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார்.
ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.
வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகார் ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.
ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.
இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.
அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும்.
உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.
பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.

அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்

இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்
இப்ப புரியுதா மேலே உள்ள படத்துக்கு அர்த்தம்.
நன்றி நக்கீரன்

Wednesday, December 23, 2009

புதிய தத்துவம்

"எந்த கேள்வி கேட்டாலும் ,பதில் என்பது ஒரே மாதிரிதான் .இருக்கும் "ஆமா அல்லது இல்லை", ஆனால் நான் கேட்க்கும் ,கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!!!!!!?????

கேள்வி என்னன்னா, கல்யாண வீட்ல செருப்பு திருடற பழக்கத்த விட்டுட்டீங்களா?

கல்யாண வீட்டில் கமுக்கமாக காயடிப்போர் சங்கம்

Wednesday, November 25, 2009

இந்த வார தத்துவம்

நண்பா என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை கெட்ட செய்தி
என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?????????

தலைப்புச்செய்தியை படிச்சிட்டு தறுதலையாக அலைவோர் சங்கம்

'எந்திரன்' கதை இதுதான்


ஹீரோவும் வில்லனும் ரஜினிதான் ஆம், எந்திரனில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். 200 வருடங்களுக்குப் பிந்தைய அல்ட்ரா உலகில் ரஜினி ஒரு விஞ்ஞானி. அவரது காதலி ஐஸ்வர்யா. மனிதர்களுக்கு நிகரான சிந்தனைத் திறனுடன் இயங்கும் ரோபோக்களைத் தயாரிக்கும் புராஜெக்ட் ரஜினியிடம். தனக்கான நல்லது, கெட்டதுகளை ஆராய்ந்து செயல்படும் பகுத்தறிவுடன் உலகுக்கு உதவும் ரோபோக்களைத் தயாரிப்பதுதான் ரஜினியின் ஐடியா. நினைத்தது போலவே ஒரு ரோபோவையும் உருவாக்குகிறார்.ரஜினி உருவாக்கிய ரோபோவும் ஒரு ரஜினிதான்!தன் கண்டுபிடிப்பை ரஜினி உலகுக்கு அறிமுகப்படுத்தும் முன், அதில் டெக்னிக்கல் சிக்கலை உண்டாக்குகிறார்கள் அவரது வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள். டிராக் மாறுகிறது ரோபோ ரஜினி.அபார ஐக்யூவும் அசுர பலமுமாக நினைத்தசெயல்களை எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்கிறது ரோபோ ரஜினி. தனது கட்டளைகளை அடித்துக் கடாசி கலீஜ் செய்யும் ரோபோர ஜினியைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் திகைக்கிறார் ரஜினி. எந்திரனாக இருந்தாலும் அந்த ரோபோ ரஜினிக்கும்ளும் இருக்கிறது ஈர இதயம். ஐஸ்வர்யா மீது ரோபோ ரஜினிக்கும் பூக்கிறது காதல். மற்றவர்களை அடித்துத் துவம்சம் செய்யும் ரோபோ ரஜினி, ஐஸ்வர்யாவிடம் மட்டும் அத்தனை சாஃப்ட்டாக நடந்துகொள்கிறது. அந்த சாஃப்ட் கார்னரை வைத்தே ரோபோ ரஜினியை கார்னர் செய்ய முடிவெடுக்கிறார் விஞ்ஞானி. அதிரடி அடிதடி ஆக் ஷன் காட்சிகளுக்குப்பிறகு சுப கிளைமாக்ஸ் என்கிறார்கள்!ஹாலிவுட் படங்கள் சொல்லாத ரோபோ கதைகள் என்று எதுவுமே இல்லை. ஆனால், எந்திரனில் டெக்னாலஜி அத்தனை உச்சத்தில் இருந்தாலும் காதலுக்கு இருக்கும் ஸ்பெஷல் ஃபீலிங்க்ஸை ரஜினி ஸ்டைலில் சொல்வதுதான் ஹைலைட்.படத்தில் ரஜினிக்குச் சமமாக ஐஸ்வர்யா ராய்க்கும் வேலை இருக்கும் என்பதால், 200 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் ஷங்கர். அதுவும் ஐந்து தவணைகளில்!படத்தில் ரஜினி வில்லன் என்றாலும், படத்துக்கு நிஜ வில்லனாக ஷாரூக் கான் மல்லுக்கு நிற்கக் கூடாது என்று சின்னக் கவலையுடன் இருக்கிறது ஷங்கர் வட்டாரம். ஷங்கரின் 'முதல்வன்' இந்தி ரீ-மேக்கான 'நாயக்'கில் முதலில் ஷாரூக்தான் நடிப்பதாக இருந்தது.அது சாத்தியப்படாததால் 'ரோபோ'வில் ஷங்கருடன் இணைய ஆவலாக இருந்தார் ஷாரூக். ஆனால், சொல்லமுடியாத காரணங்களால் அதுவும் சாத்தியப்படவில்லை.இப்போது எந்திரன் நிச்சயம் இந்தியில் டப் செய்யப்படும். அப்போது தன்னிடம் சொன்ன கதையின் தலைப்பான 'ரோபோ'வைப் பயன்படுத்த முடியாதபடி தனக்காகப் பதிந்து வைத்துக்கொண்டார் ஷாரூக். ரோபாட், மை ஹீரோ ரோபாட், மெய்ன் ஹூன் ரோபாட் என 9 ரோபாட் தலைப்புகளைப் பதிந்துவைத்திருக்கிறார் ஷாரூக். எந்திரன் ரிலீஸ் ஆவதற்குள் சட்டுபுட்டென்று ஒரு ஜாலி ரோபோ படத்தில் ஷாரூக் நடித்து டெம்போவைக்காலி செய்துவிடக் கூடாது என்பதும் ஷங்கரின் எதிர்பார்ப்பு!அலட்டிக்கொள்ளாமல் 5 கிலோ எடை கூடித்தயாராகிவிட்டார் ரஜினி. எந்திரனுக்காக ஷங்கர் 25புதிய உதவி இயக்குநர்களை நியமித்துள்ளார். அதில் 'மோஸ்ட் வான்டட்' நபர் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

நன்றி நக்கீரன்

இணையத்தை அச்சடித்தால்...


மரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா?. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ?

நேற்று அசாத்தியமாய் இருந்தது,இன்று சாத்தியமாகும் அற்புதத்தைஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்

Thursday, November 19, 2009

உலக மார்க்கெட்டில் சர்தார்ஜி


இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!

Wednesday, November 18, 2009

தத்துவம் சொல்றாருங்கோ நம்ம விஜய் அண்ணா

அண்ணா வாழ்க்கை என்பது ஒரு வட்டம் இங்க தோற்கிரவன் ஜெயிப்பான் ஜெயிக்கிறவன் தோற்ப்பான் அதே மாதிரி வாழ்க்கை என்பது ஒரு வண்டி கணவன் ஒரு சக்கரம் மனைவி ஒரு சக்கரம் ஒன்று பஞ்சரானாலும் வண்டி ஓடாது எனவே என்னை மாதிரி STEPNI ஆளுக்கொரு வச்சிக்கோங்ன்னா..



தினம் ஒரு விஜய் வாழ்த்து


Mr. I.G.R MARAAR: 500 fan 4 Producer ஐ 500 ஐ வைச்சிக்கிட்டு எந்த குப்பனோ சுப்பனோ உங்கள் பாணியில படத்தை ஓட்டிட்டு காரியத்தை சாதிக்கிறாங்க...



விஜய்:: Now listen to me. I think you are aware of the status MY PREVIOUS MOVIES. அந்த மாதிரி உங்க சிட்டில 5 தியேட்டர்ல வேட்டைக்காரன் படத்தை போட போறாங்க, அன்றைக்கு தெரியும் உங்களுக்கு,. உங்க சிட்டில நிறைய டெத் நடக்கும். எந்த குப்பனாலோ, சுப்பனாலோ இத செய்ய முடியுமா Mr. மாரர்?ஒன்லி MR. JOSEPH VIJAY (MYSELF) CAN DO THIS BE AWARE OF THIS

Mr. I.G.R MARAAR: wait wait யாருடா இங்க ஜோசப் விஜய்?

விஜய்: யாரு நடிச்சா ப்ரொடியூசருக்கு பொறி களங்கி பூமி அதிர்வது டைரக்டர் கண்ணில தெரியுதோ அவந்தான் ஜொசெப் விஜய் நாந்தான்........MR IG MAARAR

Friday, November 13, 2009

தினம் ஒரு விஜய் வாழ்த்து:

தினம் ஒரு விஜய் வாழ்த்து:

விஜய் FAN : வாங்க தளபதி படந்தான் ஓட மாட்டேங்குது செஸ் ஆவது ஆடலாம்?

தளபதி: ஒரு நிமிஷம் நண்பா SPORT SHOES மாட்டிட்டு வர்ரேன்!!!!

Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள், ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை. விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்), இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

நாட்டமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வெளையுமடி

நாட்டாமை: இந்த எட்டு பட்டி ஜனங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தீர்ப்பு சொல்லும்போது இந்த நாட்டாமை அண்ணன் தம்பி அப்பா அம்மா பொண்டாட்டி எதையுமெ பார்க்க மாட்டேன்டா நீதிடா நியாயம்டா நேர்மைடா, மேட்டர் என்றா?

கூட்டத்தில் ஒருவர்: அய்யா நம்ம ஊரில ஒரு மேட்டர் இருக்கு ரேட் 5000 பக்கத்து ஊரில 3 மேட்டர் இருக்கு ஆனால் கொஞம் ரேட் ஜாஸ்தியாகும் எப்படி வசதி?

நாட்டாமை: அடச்சே.. நான் கேட்ட மேட்டர் என்றா வழக்குன்னு?

பாதிக்கப்பட்டவர்: அய்யா எம்பட மனசு நொம்ப கவலப்பட்டு கெடக்குதுங்க, நாங்க ஜமின் உப்ப தின்னு வயித்தை கழுவுரொமுங்க, அப்படியிருக்கும்பொது ஜமின் புள்ள என் மவ ஜட்டிய கிழிச்சிட்டாருங்க, இது எந்த விதத்தில நியாயமுங்க?

நாட்டாமை: ஒம்பட பேச்சை எப்படி நம்புரது சாட்சி ஆறு?

உறவுக்காரர் 1: அய்யா நான் பார்த்தேனுங்க?

நாட்டாமை: நீ என்றி முறை வேனும்?

உறவுக்காரர் 1: அய்ய நான் அந்த புள்ளையோட அப்பாவுக்கு மூனாவது சின்ன வீட்டுக்கு எதிர் வீட்ட்டுக்காரிங்க?

நாட்டாமை: ம்ம்... செல்லாது செல்லாது...

உறவுக்காரர் 2: அய்யா நான் பார்த்தேனுங்க?

நாட்டாமை: நீ என்றா முறை வேணும்?

உறவுக்காரர் 2: அய்யா நான் அந்த புள்ளையோட அம்மாவுக்கு மூணாவது புருசணோட தம்பிங்க

நாட்டாமை: ச்சி சரியா உள்ள பிம்பிலாப்பி பிலாக்கி குடும்பமா இருக்கும் என்று நெனைக்கேன்.. சண்முகம் வெத்தலை குப்பியை கொன்டாடா புளிச் புளிச் ம்... செல்லாது செல்லாடு...

அதே நாட்டமை சிறுவன்: தாத்த நான் பார்தேன்,

நாட்டாமை: என்னம்மா கண்ணு பார்த்த..


சிறுவன்: கெணத்தோரம் நான் லட்சுமி கூட அப்பா அம்மா வெளையாட்டு வெளையான்டுன்னு இருக்கும்போது இந்த மாமா இந்த அக்காவை தூக்கிகிட்டு சோளகாட்டுக்குள்ள போச்சு, அக்கா ஒரெ சத்தம் போட்டுச்சு அங்க ஆருமே இல்ல. அப்புரம் இந்த மாமா இந்த அக்காவோட சொவப்பு ஜட்டிய கிழிச்சுச்சு. அப்பம் இந்த அக்கா அழுதுக்கின்னே வந்துச்சு நான் ஏன்க்கா அழுறன்னு கேட்டேன் அதுக்கு அக்கா என் வாழ்க்கையெ போச்சுன்னு சொல்லிச்சு, நான் சொளக்காடுக்குள்ள பார்த்தேன் இந்த மாமா அந்த சொவப்பு ஜட்டிய மூக்கில வச்சதனால மயங்கி விழுந்துச்சு, அப்புரம் நான் தண்ணிய மூஞ்சில அடிச்சு இங்க கூட்டி வந்தேன்... அவ்ளோதான்..

நாட்டாமை: ஏன்டா கழிச்சுப்போட்ட களமாறி,, நம்மளை அண்டி வந்தவங்களுக்கு இருக்க வீடு கொடுத்திருக்கோம்ல ஏன்டா சோலகாட்டுக்குள்ள தள்ளிட்டுப்போன, சரி சரி எப்படியோ தப்பு நடந்து போச்சு ஆறுடா அங்க அந்த ஜமின் பொண்டாட்டி அதான் ஏன் உடப்பிறந்தவள் போட்டிருக்க பச்ச ஜட்டியா உருவிட்டு வாடா ?????

பின்னர்

ஜமின்: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் பெரிய பெரிய மிட்டா மிராசுதார்ங்க எவ்வளவோ பேருங்க கோமனத்தை கிழிச்சிருக்காங்க அப்போ எல்லாம் உங்க தீர்ப்பு எங்க போச்சு ?????

நாட்டாமை : நிறுத்துடா!! நிறுத்துடா !! த்துடாஆ !! துடாஆ என்ன பார்த்தால் நின்ட எடத்திலேயே ஒண்ணுக்கு போற பய டேய் ஆடு போட்ட புழுக்கைய ஆப் ஆய்ல் போட முடியாது, மாடு போட்ட சாணிய மாட்டன் குருமா பண்ணமுடியாது அதைப்போல நாட்டாமை தீர்ப்புக்கு மறு பேச்சு கெடையாது நீ போடுறா ஜட்டியா ட்டியா ஆஆஆ... போடுறான்னாஆஆ..

பொண்ணு: அய்யா என் மானத்தை காப்பாத்திட்டீங்க உங்களுக்காக என் வீட்டு கதவு எப்போவுமே தொறந்திருக்கும்...

நாட்டாமை : எப்போதும் கதவ தொறந்து வைக்காதே நாய் வந்து மறுபடியும் உன் ஜட்டிய கிழிச்சுடும் அதுக்கும் பஞ்சாயத்து கூட்ட முடியாது.சண்முகம் எட்றா வன்டிய!!!!!!!!!

( ஜமின் நாட்டாமைய கொன்ன பிறகு)

நாட்டாமை: விடுங்க விடுங்க அவன் பன்னின தப்பை நீங்களும் பன்னாதீங்க அவனுக்கு நான் கொடுக்கிறா தீர்ப்பு இன்னையிலே இருந்து 18 வருஷத்துக்கு அவன் குடும்பத்தில ஆரும் ஜட்டி போடக்கூடாது மீறி ஜட்டி போட்டவங்க ஆராவது அவங்க கூட அன்னந்தண்ணி பொளங்கினால் அவங்களும் ஜட்டி போடக்கூடாது.. இது நான் வணங்கிற இந்த மண்மேல சத்தியம்...

ஆஆஅ ஆஆ நாட்டமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வெளையுமடி....

Wednesday, November 11, 2009

காதல் பஞ்சாமிர்தம்

தாங்கள் காதலில் விழுந்தவரா என்பதை கண்டறிய சில துணுக்குகள்:

1. எப்போதுமே மெலடி பாடல்கள் கேட்க தோன்றும்.

2. இணையதளம் கிடைத்தால் காதல் சம்பந்தப்பட்ட வலைப்பதிவில் மூழ்கிக் கிடப்பீர்கள்

3. நண்பர்கள் அறிவுறை கூறினால் கோபப்படுவீர்கள்

4. எப்போதும் உங்களை சுற்றி மழை பெய்வது போல் தோன்றும்

6. அவளது பெயரை எங்கு கண்டாலும் அதே இடத்தில் நிற்க தோன்றும்

7. ஐஸ்வர்யாராயே ஐ லவ் யு சொன்னாலும் அக்கா எப்படி இருக்கீங்க என்று கேட்பீர்கள் (கண்டிப்பா நான் அப்படி இல்லை)

8. கண்ணை கட்டி காஷ்மீரில் விட்டாலும் மொபைல் ரீசார்ஜ் பண்ண கடையை தேடி அழைவீர்கள்

9. காலை சொறிய சொறிய ரத்தம் வரும், காதல் மலர மலர சொர்க்கம் வரும் என கவிதை எழுத முயற்சிப்பீர்கள்

10. எப்பொது பேனா வாங்கினாலும் அவளது பெயரை முதலில் எழுத தோன்றும்


இது எல்லாவற்றிற்க்கும் மேலாக ஐந்தாவது பாய்ன்ட் விடுபட்டதை கூட பார்க்காமல் படித்து கொண்டிருக்கிறீர்கள்.

காதல் சூறாவளி டி ஆர் க்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்க ஓட்டு போட்டோர் சங்கம்.

தினம் ஒரு விஜய் வாழ்த்து


தினம் ஒரு விஜய் வாழ்த்து :
"சச்சின்" ந்னாங்க ஆனா வடிவேலை ஹீரோ போட்டு காமெடி பண்ணியிருந்தாங்க..

"போக்கிரி" ந்னாங்க ஆனா ஹீரோ வாட்ச்மேன் வேடம் பூன்டிருந்தார்.

"அழகிய தமிழ் மகன்" ந்னாங்க ஆனா படத்தில கடைசி வரைக்கும் அழகிய தமிழ் மகனை காட்டவேயில்லை.

"குருவி" ந்னாங்க தியேட்டரில காக்கா கூட பறக்கலை

இப்போ வேட்டைக்காரன் ஹீரொ என்ன செய்யப்போகிறார்!!!
இது பற்றி கௌண்டமணியும் விஜயும் பேசியதாவது:

கௌண்டமணி: போனை எடுத்தா நய் நய்ன்றாங்க! யேன்ப்பா காதலுக்கு மரியாதை கொடுத்தவனே மேலெ சொன்ன கம்ப்ளெய்ன்டுக்கு என்னை விசாரிக்க சொல்றாங்கப்பா நான் என்ன வக்கீலா போலீஸா? ஒரே குஷ்டமப்பா...

விஜய்: டேய் கௌண்டா ஒழுங்கா ஓடிபோய்விடு உன்னோட சீசன் முடிஞ்சிடுச்சு, நம்ம தியேட்டரில உன் படத்தை ஓட்ட நெனைச்ச ?
கௌண்டமணி: சரி உன்படம் எந்த தியேட்டரில ஒடிருக்கு சொல்றா
விஜய்: அது எனக்கு தெரியாதுடா ..

கௌண்டமணி: தெரியலேண்ணா செருப்பாலேய அடிப்பேன்டா...

Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள், ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை. விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்), இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

Tuesday, November 10, 2009

விஜய் ஒரு மொக்கை மாமா


விஜய்யை இன்னும் ஒரு மொக்கை மாமா என்று நம்பாதவர்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்!!!

விஜய்: என்னய்யா ஆச்சு வன்டிக்கு? படம் பார்க்க போற வழியில?
டிரைவர்: சாரி சார் வன்டி இனிமேல் ஒரு அடி கூட முன்னே நகராது ப்ரேக் உடைஞ்சு போச்சு..
விஜய்: சரி சரி ரிவர்ஸில எடு வீட்டுக்காவது போலாம்..
டிரைவர்: (பேன்டை கழற்றி எறிந்துவிட்டு ஓடிவிட்டான்)


டைரக்டர்: சார் நம்மோட அடுத்த படம் 100 நாட்களை தாண்டி ஓடனும் விஜய்: இல்ல இல்ல 200 நாள் ஓடனும்!!! டைரக்டர்: ஜோக் அடிக்காடீங சார்? விஜய்: ஜோக் அடிச்சது நானா இல்ல நீயா???????????



அல்டிமேட்ஸ்டார் ஒய்வு நேரத்தில் என்ன பன்னுவார்?
கார் ரேஸிங்
பன்னுவார்..


சூப்பர்ஸ்டார் ஒய்வு நேரத்தில் என்ன பன்னுவார்?
இமயமலை சென்று வருவார்!!!!
உலக நாயகன் ஒய்வு நேரத்தில் என்ன பன்னுவார்?
அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்துவார்...
இளைய தளபதி மகேஸ்பாபுவின்!!! அடுத்த படத்தை பிச்சை கேட்டு அவர் வீட்டு முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பார்!!!!!

விஜய்: அப்பா கான்னடத்தில புனித் ராஜ்குமார் நடித்த AJAY என்ற படம் 200 நட்களை தான்டி ஓடிகிட்டிருக்கு.. ப்ளீஸ் அந்த படத்தின் ரீமேக் உரிமையை எப்படியாவது வாங்கிடுங்க...
விஜயின் அப்பா: டேய் அது நீ நடித்த கில்லி படம் தான்டா ரீமெக்குக்கு பொறந்த டுபுக்கு..


வருங்காலத்தில் விஜய் முதலமைச்சர் ஆனால் பட்ஜெட் எப்படி தயாரிப்பார்?
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் (ரீமேக்) காப்பி எடுப்பார்....
ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் ரிலீஸ் தெதியை சொல்ல மாட்டேன்றீங்க?விஜய்: சாகிற நாள் தெரிந்தால் வாழுற நாள் நரகமாயிடும் !!!!

விஜயை மொக்க மாமா என்று நம்புவோர் சங்கம்....
Continue.....
Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள், ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை. விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்), இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

இந்த வார காதல் தத்துவம்:


இந்த வார காதல் தத்துவம்:
காதலி அழைக்கிறாள் என்று தனிமையில் எங்கும் அவளுடன் செல்ல வேன்டாம்?????
சுப்ரமணியபுரம் பார்த்து உஷாரானோர் சங்கம்